இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 1)

படம்
  தமிழ் வணக்கம்!!! பண்டைய தமிழர்கள் , அறிவில் சிறந்தவர்கள் - வீரத்தில் திளைத்தவர்கள். இன்று நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்கள் , அன்றே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் , சில நாடுகளுடன் போரிட பல ஆயுதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் , அக்காலகட்டத்தில் , பல நாடுகளைக் கைப்பற்ற சில ஆயுதங்கள் மட்டுமே தேவைப்பட்டன. அவ்வாயுதங்கள் , நுண்ணறிவோடும் , சரியான கணக்கீடோடும் , வடிவத்தோடும் செய்யப்பட்டன. அவை குறி தவறாமல் இலக்கை அடைந்தன. அவற்றுள் நாம் அறியாத சில ஆயுதங்கள் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம். வளரி ஒரு வீசு வகை ஆயுதம். இது போர்காலங்களிலும் , கால்நடைகளை வேட்டையாளர்களிடமிருந்து காப்பாற்றவும் பயன்படுத்தப்பட்டன. இவை புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. வளரியின் ஒரு முனை உருண்டையாகவும் , மற்றொரு முனை தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் இரும்பினால் செய்யப்படுகிறது. இது பொதுவாக வீசும் போது சுழலும். ஆனாலும் , வீசுபவர் இவ்வாயுதத்தின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவை செங்குத்தாகவும் , கிடைமட்டமாகவும் சுழலக்கூடியது. இவ்வாயுதம் கொண்டு ஒருவரைக் கொல்ல ...

குமரிக்கண்டம் (பகுதி 1)

படம்
  தமிழ் வணக்கம்! நம்ம வாழ்க்கைல தினமும் எதாவது ஒரு விஷயத்தை யார்கிட்டயாவது இருந்தோ இல்ல எதையாவது பாத்தோ தெரிஞ்சிக்கிறோம். அந்த மாதிரி , நாங்க சமூக வலைத்தளம் மூலியமா தெரிஞ்சிகிட்ட விஷயத்தை இன்னிக்கி உங்ககிட்ட பகிரணும்னு விரும்புறோம். இந்த பதிவு உங்கள பல விஷயங்களை பத்தி ஆழமா சிந்திக்க வைக்கும். தமிழ் மொழி சார்ந்தும் தமிழ் கண்டம் சார்ந்தும் பல கேள்விகள் நமக்குள்ள எழும். அதுல சில கேள்விகளுக்கு பல வழிகள்ல இன்னிக்கு நம்ம விடை தெரிஞ்சுக்கலாம். பண்டைய தமிழ் நாகரிகத்தை பத்தி அறிஞர்கள் மத்தியில பரவலா பேசப்படுது. நமல்ல நெறைய பேர் லெமுரியா கண்டம் பற்றி கேள்வி பற்றுப்போம். கன்னியாகுமரிக்கு அப்பால் , மேற்கே ஆப்பிரிக்கா வரைக்கும் கிழக்கே ஆஸ்திரேலியா வரைக்கும் நீண்ட ஒரு மிக பெரிய நிலப்பரப்பு இருந்துச்சுன்னும் அது கடல் சீற்றத்தினால் அளிக்கப்பட்ருச்சு நும் பல ஆராய்ச்சிகள்லயும் தமிழ் சங்க இலக்கியங்கள்லயும் தெரிவிக்கப்பற்றுக்கு. ஆனா சில வரலாற்று ஆசிரியர்கள் , லெமுரியான்றது கட்டுக்கதைன்னு சொல்லி மூன்று கருத்த முன் வைக்கிறாங்க. முதல் கருத்தா , சில அறிஞர்கள் , அட்லாண்டிக் பெருங்கடல்ல மூழ்குன ஒரு கண...